மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது -ராகுல் காந்தி
மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.


மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி சுட்டுரையில் கூறியதாவது, மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது. வரலாறு காணாத உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி-23.9%, 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மை, 12 கோடி பேருக்கு வேலை இழப்பு, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை செலுத்தவில்லை, உலகளவில் அதிகளவில் கரோனா பாதிப்பு மற்றும் எல்லையில் ஆக்கிரமிப்பு பிரச்சனைகள் என கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் கடந்த சில நாள்காளாக மத்திய அரசை பொருளாதாரத்தை கையாளுதல், கரோனா தொற்று மற்றும் இந்தியா-சீனா எல்லையில் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...