மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசா வெள்ளம் : 115 பேர் மீட்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோர்தா மற்றும் பூரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 115 பேரை மீட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படை தெரிவித்துள்ளனர்.

News image

ஒடிசா வெள்ளம் : 115 பேர் மீட்பு

Updated On :2 செப்டம்பர் 2020, 6:14 am

ஒடிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோர்தா மற்றும் பூரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 115 பேரை மீட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஒடிசா தீயணைப்பு மற்றும் மீட்புப் படை இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், 

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் படகுகளுடன் 8 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, கூடுதலாக 12 அணிகள் கட்டாக்கில் உள்ள ஒடிசா தியணைப்பு மற்றும் பேரிடர் நிறுவனத்தில் தயார் நிலையில் உள்ளனர்.

கனாஸ் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள 6 மீட்புக் குழுக்கள் பூரி மாவட்டத்தின் பதல்பூர், நுவாஹாஹி, ஹல்திபாடா, படாபுட் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 62 பேரை மீட்டுள்ளனர். மேலும், பட்லாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு முதியவரையும் மீட்டுள்ளனர்.

கோர்தா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள குழு 50 பேரை மீட்டுள்ளனர். மேலும், மீட்புக் குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களிலும் நிவாரணப் பொருள்களை விநியோகித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.