திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழாவின் 5வது நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த செப்.6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
5-ம் திருவிழாவான வியாழக்கிழமை மாலை திருக்கோயில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் வள்ளியம்மனுக்கு குடவரைவாயில் தீபாராதனையும், எதிர்சேவை காட்சியளித்த ஸ்ரீ ஜயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.