வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இந்தியாவில் இதுவரை 224 செயலிகளுக்குத் தடை: மத்திய அமைச்சர் தகவல்

தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக 224 செயலிகளுக்கு தடை விதித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே
Updated On :16 செப்டம்பர் 2020, 12:23 pm

PTI

தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக 224 செயலிகளுக்கு தடை விதித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்களவையில் மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் 69 ஏ பிரிவின் கீழ் டிக்டோக், ஹலோ உள்ளிட்ட 224 செயலிகளின் பயன்பாடுகளை இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் தேசிய பாதுகாப்பு விஷயங்கள் மேம்படும், மேலும் எந்தவொரு இந்தியரின் தகவல்களும் வெளிநாட்டினருக்கு கிடைக்காமல் தடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

கடந்த ஜூன் மாதத்தில், டிக்டோக், யூசி உலாவி, ஷேரீட், வெச்சாட், கேம்ஸ்கேனர் மற்றும் மி கம்யூனிட்டி உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு அரசாங்கம் தடை விதித்தது.

இந்த மாத தொடக்கத்தில், பிரபல இணைய விளையாட்டான பப்ஜி உள்பட 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.