ஒடிசா உயர்நீதிமன்றம் 2 நாள்கள் மூடல்

ஒடிசா உயர்நீதிமன்றத்தின் பல துறைகளில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுத்தகரிப்பு பணிக்காக 2 நாள்கள் நீதிமன்றம் மூடப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஒடிசா உயர்நீதிமன்றம்
ஒடிசா உயர்நீதிமன்றம்

ஒடிசா உயர்நீதிமன்றத்தின் பல பிரிவுகளில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுத்தகரிப்பு பணிக்காக 2 நாள்கள் நீதிமன்றம் மூடப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் கூறுகையில்,

ஒடிசா உயர் நீதிமன்றத்தில்  பல பிரிவுகளில் ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் முழு வளாகத்தையும் சுத்திகரிக்கும் நோக்கத்திற்காக செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாள்கள் மூடப்படும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com