பழங்குடியின சிறுமிகள் 3 பேர் நீரில் மூழ்கி பலி

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சிறுமிகள் 3 பேர் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சிறுமிகள் 3 பேர் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜார்கண்டின் கோடா மாவட்டத்தில் உள்ள குமார்டோய் கிராமத்தில் 2 சிறுவர்கள், 3 சிறுமிகள் உள்ளிட்ட 5 குழந்தைகள் அங்குள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது 3 சிறுமிகள் ஆழமான நீர் பகுதியில் சிக்கி மூழ்கியுள்ளனர். இதைக் கண்ட சிறுவர்கள் உடனடியாக கிராம மக்களிடம் தெரிவித்தனர்.

இருப்பினும், கிராமவாசிகள் மீட்பதற்குள் சிறுமிகள் சோதி குமாரி (11), நந்தினி குமாரி (9), ஆஷா குமாரி (10) ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com