நொய்டாவில் 4 லட்சம் போலி 'ராபிட் கருவிகள்' பறிமுதல்

நொய்டாவில் போலி கரோனா பரிசோதனை கருவிகளை தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து 4 லட்சம் ‘ராபிட் கிட்’களை செவ்வாய்க்கிழமை காவல்துறை பறிமுதல் செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நொய்டாவில் போலி கரோனா பரிசோதனை கருவிகளை தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து 4 லட்சம் ‘ராபிட் கிட்’களை செவ்வாய்க்கிழமை காவல்துறை பறிமுதல் செய்தனர்.

நொய்டா செக்டார் 20 பகுதியில் ராஜேஷ் பிரசாத் என்பவர் போலி கரோனா பரிசோதனை கருவிகளை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

புகாரின் அடிப்படையில், அங்கு ஆய்வு நடத்திய காவல்துறையினர் சுமார் 3.97 லட்சம் போலி ராபிட் பரிசோதனை கருவிகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பதிப்புரிமைச் சட்டம், 1957 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிமையாளர் ராஜேஷை தில்லி அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com