இந்தியாவில் கரோனா வைரஸால் (கொவைட்-19) பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 117-ஆக அதிகரித்தது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 37 போ் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவா்கள் மூலம் இந்தியாவிலும் கரோனா பரவியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 33 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் 4 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரில் 3 பேர் மும்பை, ஒருவர் நவி மும்பையைச் சேர்ந்தவர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 115-ஆக அதிகரித்துள்ளது.