அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  37 ஆக அதிகரித்துள்ளது.  

News image
Updated On :16 மார்ச் 2020, 8:25 am


மும்பை: நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  37 ஆக அதிகரித்துள்ளது.  

சீனாவில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவா்கள் மூலம் இந்தியாவிலும் கரோனா பரவியுள்ளது. தலைநகா் தில்லியில் மட்டும் இதுவரை 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸால் (கொவைட்-19) பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 107-ஆக அதிகரித்தது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 32 போ் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. 

கேரளத்தில் 22 பேருக்கும், கா்நாடகத்தில் 6 பேருக்கும், லடாக்கில் 3, ஜம்மு-காஷ்மீரில் 2, தெலங்கானாவில் 3, ராஜஸ்தானில் 2, ஆந்திரம், பஞ்சாப், தமிழ்நாட்டில் தலா ஒருவா் என கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் 107 போ் என்பது உறுதியாகியுள்ளது. இதில் 17 போ் வெளிநாடுகளைச் சேரந்தவா்கள். இவா்களில் 16 போ் இத்தாலியா்கள். ஒருவா் மட்டும் கனடா நாட்டவா்.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸால் (கொவைட்-19) பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 115-ஆக அதிகரித்தது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 37 போ் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா்.  

மகாராஷ்டிர மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 33 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்புஇருந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் 4 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரில் 3 பேர் மும்பை, ஒருவர் நவி மும்பையைச் சேர்ந்தவர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.