தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா: இந்தியாவில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

கரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 727 ஆக அதிகரித்துள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2020, 3:59 am


கரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 727 ஆக அதிகரித்துள்ளது. 

உலகின் 195-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது. இதுவரை 23,670 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக புதன்கிழமை நிலவரப்படி கரோனா நோய்த் தொற்றால் 11 பேர் உயிரிழந்த நிலையில், குஜராத்தில் இருவர், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் தலா ஒருவர் அந்த நோய்த் தொற்றுக்கு நேற்று வியாழக்கிழமை பலியாகினர். புதன்கிழமை நிலவரப்படி அந்த நோய்த்தொற்றால் 606 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக சுமார் 88 பேருக்கு அந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளது. இதில் 47 ரேக் வெளிநாட்டவர்களாவர். 

இந்நிலையில்,ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நாட்டில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை727 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.