சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அவரது வீட்டு வாசலில் சென்னை மாநகராட்சி அறிவித்தாக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி சர்ச்சை எழுந்துள்ளதை தொடர்ந்து அவரது வீட்டில் ஒட்டியிருந்த கரோனா நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
எனினும், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர், தவறுதலாக பட்டியலில் முகவரி இடம் பெற்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.