மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,132 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் புதிதாக 4,132 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,40,461 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,543 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 127 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 45,809 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 16,09,607 பேர் குணமடைந்துள்ளனர். 84,082 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.