ஆந்திரத்தில் 6,190, கர்நாடகத்தில் 10,453 பேருக்கு கரோனா
By DIN | Published On : 29th September 2020 09:33 PM | Last Updated : 29th September 2020 09:33 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.
ஆந்திரம்:
ஆந்திரத்தில் புதிதாக 6,190 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 6,87,351 ஆக உயர்ந்துள்ளது. இதில் 59,435 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 6,22,136 பேர் குணமடைந்துள்ளனர், 5,780 பேர் பலியாகியுள்ளனர்.
கர்நாடகம்:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,453 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 136 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 5,92,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,76,378 பேர் குணமடைந்துள்ளனர், 8,777 பேர் பலியாகியுள்ளனர். 1,07,737 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.