சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

இந்தியாவில் மேலும் 4 பேருக்கு புதிய வகை கரோனா: மத்திய அரசு

இந்தியாவில் மேலும் 4 பேருக்கு புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2021, 3:51 pm IST

இந்தியாவில் மேலும் 4 பேருக்கு புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் மேலும் 4 பேர் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே, புதிய வகை கரோனா கண்டறியப்பட்ட 25 பேரில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாதம், பிரிட்டனில் புதிய வகை அதிதீவிர கரோனா கண்டறியப்பட்டதை அடுத்து, அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிக தடைவிதித்து, சமீபகாலமாக பிரிட்டனிலிருந்து வந்த பயணிகள், அவர்களுடன் தொடார்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.

அதில், கரோனா கண்டறியப்படுவோரின் சளி மாதிரிகளை மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. அந்த சோதனை செய்ததில், இதுவரை 29 பேருக்கு பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் அந்தந்த மாநிலங்களில் தனிமைப்படுத்தும் அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.