தில்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விதிமுறைகளை மீறி வெளியே கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 1,336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கரோனா நோய்ப் பரவல் காரணமாக, தில்லியில் பொது இடங்களில் டிசம்பர் இரவு 31 முதல் ஜனவரி 1 காலை 6 மணிவரை பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.
இந்நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி இரவு விதிமுறைகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 1,330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 26 நபர்கள், வேகமாக வாகனம் ஓட்டியதாக 174 நபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத இடத்தில் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தியதற்காக 706 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், அதில் 226 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









