தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

பறவைக் காய்ச்சல்: மகாராஷ்டிரத்தில் சிவப்பு எச்சரிக்கை

நாடு முழுவதும் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சுனில் கேதார் தெரிவித்துள்ள

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜனவரி 2021, 2:49 pm IST

நாடு முழுவதும் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சுனில் கேதார் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், கேரளம், ஹரியாணா, உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பறவைக் காய்ச்சல் தொற்று நோயால் பறவைகள் பலியாகி வருகின்றன.

இதனையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பரவாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில கால்நடைத்துறை அமைச்சர் கூறியதாவது,

"எங்களிடம் உள்ள தகவல்களின்படி, ராஜஸ்தான், குஜராத், கேரளம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் பறவைக் காய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

இதில் சில மாநிலங்களுடன், மகாராஷ்டிர மாநிலம் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால், கடுமையான விழிப்புணர்வைக் கடைப்பிடிக்குமாறு மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டு சிவப்பு எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளோம். ஏதேனும் பறவைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுக்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம், " என்று அமைச்சர் கூறினார்.

மேலும், புதன்கிழமை தாணே மாவட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இறந்த பறவைகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதில், பறவைக் காய்ச்சலால் உயிரிழக்கவில்லை என முடிவுகள் வந்துள்ளதாக தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.