12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை மாற்றம்: தமிழக அரசு

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் அட்டவணையில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை மாற்றம்
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை மாற்றம்

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் அட்டவணையில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மே 3ஆம் தேதி நடைபெறவிருந்த முதலாவது(மொழிப்பாடம்) தேர்வு மே 31ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தியில்,

2020-2021ஆம் கல்வியாண்டில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 3 முதல் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுவதால், மே 3 நடைபெறுவதாக இருந்த மொழிப்பாடத்தேர்வு மட்டும் மே 31ஆம் தேதி நடைபெறும்.

இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com