தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோயில் திருமணங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி

தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

News image

கோயிலில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி

Updated On :13 ஏப்ரல் 2021, 10:20 am

DIN

தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த வாரம் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை, கோயில் மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு 50 பேருக்கு மேல் அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், திருமணத்திற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே, தனிமனித இடைவெளியை பின்பற்றி நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.