மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் சுட்டுரையில் வெளியிட்ட செய்தியில்,
இன்று எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசி 3 நாள்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.