தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

மேற்கு வங்க தேர்தல்: கரோனா அதிகரிப்பால் பேரணிகளை ரத்து செய்த ராகுல்

கரோனா தீவிரமடைந்து வருவதால் மேற்கு வங்கத்தில் தனது தேர்தல் பேரணிகளை ரத்து செய்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

News image
ராகுல் காந்தி
Updated On :18 ஏப்ரல் 2021, 8:21 am

DIN

கரோனா தீவிரமடைந்து வருவதால் மேற்கு வங்கத்தில் தனது தேர்தல் பேரணிகளை ரத்து செய்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

முதல் 5 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 3 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது கரோனா தீவிரமடைந்து வருவதை கருத்தில் கொண்டு தனது பேரணிகளை ரத்து செய்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்டது,

கரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள எனது அனைத்து பேரணிகளையும் ரத்து செய்கிறேன்.

தற்போதைய சூழலில் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அனைத்து தலைவர்கள் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.