2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மீதமுள்ள தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தி திரிணமூல் கடிதம்

மேற்கு வங்க சட்டப்பேரவையின் 6, 7 மற்றும் 8ஆம் கட்டத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது.

News image
மீதமுள்ள தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தி திரிணமூல் கடிதம்
Updated On :20 ஏப்ரல் 2021, 9:07 am

ANI

மேற்கு வங்க சட்டப்பேரவையின் 6, 7 மற்றும் 8ஆம் கட்டத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ள நிலையில், ஏப். 22, 26, 29 ஆகிய தேதிகளில் மீதமுள்ள மூன்று கட்டத் தோ்தல்கள் நடைபெற உள்ளன.

நாடு முழுவதும் கரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருவதால் அடுத்த 3 கட்டத் தேர்தல்களையும் இணைத்து ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திரிணமூல் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 6, 7 மற்றும் 8ஆம் கட்டத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.