தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு: மும்பை சந்தைகளில் குவிந்த மக்கள்

மகாராஷ்டிரத்தில் காய்கறி, மளிகை கடைகளை திறக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை சந்தைகளில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது.

News image
மும்பை சந்தையில் குவிந்த மக்கள்
Updated On :21 ஏப்ரல் 2021, 10:41 am

DIN

மகாராஷ்டிரத்தில் காய்கறி, மளிகை கடைகளை திறக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை சந்தைகளில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது.

மாநிலம் முழுவதும் கரோனா 2ஆம் அலை தீவிரமாக பரவியதையடுத்து மே 1ஆம் தேதி காலை 7 மணிவரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், மளிகை, காய்கறி, பழக்கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காய்கறி, பழம், மளிகை கடைகள், பால்பண்ணைகள், பேக்கரிகள் உள்பட அனைத்து வகையான உணவுக் கடைகளும் காலை 7 மணிமுதல் 11 மணிவரை மட்டுமே திறக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு இன்று அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து மும்பையின் தாதர் காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். 

Story image

மகராஷ்டிரத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சந்தைகளில் மக்கள் குவிந்து வருவதால் தொற்றின் பரவல் அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.