வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஊரடங்கு: திருவாரூரில் வெறிச்சோடிய சாலைகள்

ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட முழு பொது முடக்கம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

News image
திருவாரூரில் வெறிச்சோடிய சாலைகள்
Updated On :25 ஏப்ரல் 2021, 10:10 am

DIN

திருவாரூர்: ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட முழு பொதுமுடக்கம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி போக்குவரத்து வணிக நிறுவனங்கள் இயக்கம் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன.

Story image

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எந்தக் கடைகளும் திறக்கப்படவில்லை. மளிகை கடைகள், காய்கறி கடைகள், வணிக நிறுவனங்கள், சிறு பெட்டிக் கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில இடங்களில் மருந்து கடைகள் திறந்திருந்தன. அம்மா உணவகம் வழக்கம் போல் இயங்கியது.

Story image

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. துப்புரவு பணியாளர்கள் மட்டும் ஆங்காங்கே துப்புரவு பணிகளை செய்து கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த தினம் என்பதால் ஒரு சில மண்டபங்களில் திருமணம் நடைபெற உறுதி செய்யப்பட்டு இருந்தது. அந்த இடங்களில் குறைந்த அளவு உறவினர்களுடன் திருமணம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.