தில்லி விவசாயிகள் போராட்டத்தில் 510 காவலர்கள் காயம்: காவல்துறை ஆணையர்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 510 காவலர்கள் காயமடைந்துள்ளதாக தில்லி காவல்துறை ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
தில்லி விவசாயிகள் போராட்டம்: 510 காவலர்கள் காயம்
தில்லி விவசாயிகள் போராட்டம்: 510 காவலர்கள் காயம்
Updated on
1 min read

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 510 காவலர்கள் காயமடைந்துள்ளதாக தில்லி காவல்துறை ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் 11 கட்டமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் தடுப்புகளை மீறி தில்லிக்குள் விவசாயிகள் நுழைந்த நிலையில் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இதனால் தில்லி எல்லை வன்முறைகளமாக காட்சியளித்தது.

இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் டிராக்டர் பேரணியின் போது விவசாயிகளுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக 510 காவலர்கள் காயமடைந்ததாக தில்லி காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com