தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கேரளத்தில் 192 மாணவர்களுக்கு கரோனா

கேரளத்தில் 192 மாணவர்கள் மற்றும் 72 ஆசிரியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :8 பிப்ரவரி 2021, 10:25 am

ANI

கேரளத்தில் 192 மாணவர்கள் மற்றும் 72 ஆசிரியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் கடந்தாண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டது. அதன்பின், நோய்தொற்று பரவல் அடிப்படையில் மாநிலத்திற்கு ஏற்ப பள்ளிகள் திறக்கப்பட்டது.

இதனிடையே கேரளத்தில் நோய்த்தொற்றின் பரவல் குறையாத நிலையில் கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து மலப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மரஞ்சேரி மேல்நிலைப் பள்ளியில் 149 மாணவர்கள் மற்றும் 39 ஆசிரியர்கள், வன்னேரி மேல்நிலைப் பள்ளியில் 43 மாணவர்கள் மற்றும் 33ஆசிரியர்கள் என மொத்தம் 192 மாணவர்கள் மற்றும் 72 ஆசிரியர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அப்பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.