‘நேர்மையானவர்கள் திரிணமூலில் இருக்க முடியாது’: பாஜக பொதுச்செயலர்

நேர்மையானவர்கள் திரிணமூலில் இருக்க முடியாது என்று பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வா்கியா தெரிவித்துள்ளார்.
பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா  (கோப்புப்படம்)
பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா (கோப்புப்படம்)

நேர்மையானவர்கள் திரிணமூலில் இருக்க முடியாது என்று பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வா்கியா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், வன்முறை மிகவும் வேதனை அளிப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் கூறியதாவது,

தினேஷ் திரிவேதி மட்டுமல்ல, யார் நேர்மையான பணியை செய்ய விரும்புகிறாரோ, அவர் திரிணாமுல் காங்கிரஸில் இருக்க முடியாது என்றார்.

மேலும், தினேஷ் திரிவேதி பாஜகவில் இணைய விரும்பினால், நாங்கள் அவரை வரவேற்போம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com