இந்திய - பாகிஸ்தான் எல்லை பிரச்னைகள் தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர்நிறுத்த விதிமுறைகளை மீறி வருகின்றனர். இதனால் ராணுவ வீரர்களும், பொதுமக்களும் பலியாகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில், இரு நாட்டை சேர்ந்த ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் தரப்பில் பிப்.22 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதில், எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் பிற பிரச்னைகள் குறிந்து இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்து, வெளிப்படையாக கலந்துரையாடினர்.
எல்லைகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை உறுதி செய்ய இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், பிப்ரவரி 24 நள்ளிரவு முதல் அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகளை பின்பற்றுவதை உறுதி செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


