6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இலங்கை அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(புதன்கிழமை) இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை சந்தித்தார்.

News image
இலங்கை அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
Updated On :6 ஜனவரி 2021, 10:10 am

ANI

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(புதன்கிழமை) இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை சந்தித்தார்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில்,மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.

இந்த பயணத்தின் போது இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்ச மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்க உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இலங்கை அதிபரை நேரில் சந்தித்து கலந்துரையாடும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.

இலங்கை அதிபரை நேரில் சந்தித்து கலந்துரையாடும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.

இந்நிலையில், இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை நேரில் சந்தித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.