தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நாளை(வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகம், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது.
இந்நிலையில், மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நாளை(வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.