பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அமித்ஷாவை சந்தித்தார் ஹரியாணா முதல்வர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார்.

News image
அமித்ஷாவை சந்தித்தார் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார்
Updated On :8 ஜனவரி 2021, 2:19 pm

ANI

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் ஹரியாணா, பஞ்சாப் விவசாயிகள் தொடர்ந்து 44வது நாளாக போராடி வரும் நிலையில் ஹரியாணா முதல்வர், மத்திய அமைச்சரை சந்தித்துள்ளார்.

சந்திப்பிற்கு பின் முதல்வர் மனோகர் லால் பேசியதாவது,

இன்றைய 8வது கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றாலும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தவிர மற்ற பிரச்னைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இதற்குமுன் கோவா மற்றும் உத்தரப் பிரதேசம் மாநில முதல்வர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.