நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெள்ளக்கோவில்: சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு கிளை வாய்க்கால் நீர் பாசனக் குழுவினர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வியாழக்கிழமை அறிவித்தனர்.

News image

உண்ணாவிரத அறிவிப்பு போஸ்டர்.

Updated On :14 ஜனவரி 2021, 12:55 pm

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு கிளை வாய்க்கால் நீர் பாசனக் குழுவினர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வியாழக்கிழமை அறிவித்தனர்.

இப்பகுதி காங்கயம் - வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் அரசு விதிமுறைப்படி 7 நாள் பாசனம், 7 நாள் அடைப்பு என மாதத்துக்கு இரண்டு சுற்று தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் 28 நாள் அடைப்பு, 3 நாள்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. 

இந்த தண்ணீரை வைத்து ஆடு, மாடுகளின் தண்ணீர் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. எப்படி விவசாயம் செய்வது என கேள்வியெழுப்பும் விவசாயிகள், தங்களுக்கு விதிமுறைப்படி கிடைக்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டுமென பலமுறை வலியுறுத்தியும், போராடியும் தீர்வு கிடைக்கவில்லை. 

இதையடுத்து தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி ஜன. 19 ம் தேதி செவ்வாய்க்கிழமை வெள்ளக்கோவில், காங்கயத்தில் கடையடைப்பு, அதே தினத்தில் காங்கயம் நான்கு சாலைச் சந்திப்பு அருகில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமும் அறிவித்து, அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.