அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

‘கட்சியிலிருந்து வெளியேற விரும்புவர்கள் விரைவாக வெளியேறுங்கள்’:மம்தா

திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலக நினைப்பவர்கள் விரைவாக விலகுங்கள் என்று அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
Updated On :25 ஜனவரி 2021, 11:43 am

ANI

திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலக நினைப்பவர்கள் விரைவாக விலகுங்கள் என்று அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சுவேந்து அதிகாரி கடந்த மாதம் விலகியதை தொடர்ந்து பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஹூக்லி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது எம்.எல்.ஏ.க்களின் பதவி விலகல் குறித்து மம்தா கூறியதவாது,

திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலக நினைப்பவர்கள் விரைவாக விலகுங்கள். நீங்கள் மேற்குவங்கத்திற்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேவையில்லை. வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அவர்களுக்கு இடம் கொடுக்கமாட்டோம் என்ற பயத்தில் கட்சியை விட்டு விலகுகின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.