மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

டிக்டாக் உள்பட 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை

சீனாவின் டிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு கடந்த ஆண்டு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது நிரந்தரத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

News image
டிக்டாக்
Updated On :27 ஜனவரி 2021, 9:55 am

DIN

சீனாவின் டிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு கடந்த ஆண்டு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது நிரந்தரத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம், சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதையடுத்து, அந்த செயலிகளின் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு நிறுவனங்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாத காரணத்தால், அந்த செயலிகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவுடனான எல்லை மோதலுக்கு பிறகு கடந்த ஆண்டு டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கான அனுமதி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்த செயலிகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளன என்ற நம்பகமான தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

கிளப் ஃபேக்டரி, ஷேர்இட், லைக், வெய்போ, பைடு, பிகோ லைவ், வி சாட் ஆகிய சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.