மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தடுப்பூசி போடுவதில் விழிப்புணர்வு: ஆர்வத்தோடு பங்கேற்ற பிராந்தியங்கரை கிராமத்தினர்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை கிராமத்தில் சனிக்கிழமை (ஜூலை 17) காலை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள கிராம மக்கள் காலையிலேயே குவிந்தது சுகாதாரத் துறையினரை வியப்பில் ஆழ்த்தியது.

News image
பிராந்தியங்கரையில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்.
Updated On :17 ஜூலை 2021, 5:48 am

DIN



வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை கிராமத்தில் சனிக்கிழமை (ஜூலை 17) காலை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள கிராம மக்கள் காலையிலேயே குவிந்தது சுகாதாரத் துறையினரை வியப்பில் ஆழ்த்தியது.

Story image

மிகவும் பின்தங்கிய கிராமமான பிராந்தியங்கரை ஊராட்சியில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாம் தொடங்கிய 2 மணி நேரத்தில் 420 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Story image

பிராந்தியங்கரையில் வரிசையில் நின்று ஆர்வத்தோடு தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராமத்தினர்.

ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு செய்திருந்த நிலையல், காலையிலேயே வருகை தந்த மக்கள் வரிசையாக நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

ஊராட்சித் தலைவர் கஸ்தூரி தலைமை வகித்து தடுப்பூசி போட்டுக் கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

Story image

தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வத்தோடு வரிசையில் நிற்கும் பிராந்தியங்கரை கிராம மக்கள்.

மருத்துவர் ராம்குமார், ஆய்வாளர் கோதண்டபாணி, பாஸ்கர் உள்ளிட்ட மருத்துக் குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.