நாளைமுதல் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் நாளைமுதல் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் நாளைமுதல் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் நாளைமுதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை தடுப்பூசி போடுவதில் சிக்கல் உள்ளதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,
இன்று மாலை 5 மணிக்கு 4,20,570 டோஸ் தடுப்பூசிகள் சென்னை வரவுள்ளதால் நாளைமுதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் தொடர்ந்து போடப்படும்.
தடுப்பூசி வந்தவுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் உடனடியாக அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...