2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
Updated On :4 ஜூன் 2021, 8:56 am

DIN

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும்.

காவிரி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கையில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், தர்மபுரி, சேலம், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கேரள, கர்நாடக, லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

சென்னை

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.