தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் காய்கறி விற்பனை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுமுடக்கம் வரும் 7 -ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், தமிழகத்தில் 14 -ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்க காலத்தில் மக்கள் காய்கறி, பழங்கள் வாங்க சிரமப்படாமல் இருக்க வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றதால் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.