கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சேவைக் கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் ரூ.150 மட்டுமே வசூலிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா 2-ம் அலையின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள் கிழமை உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசியின் விலை போக சேவைக் கட்டணமாக ரூ. 150 வரை மட்டுமே வசூலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.