பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தெப்பக்காடு முகாமிலுள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கரோனா பரிசோதனை

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிலுமுள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை பணிகள் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

News image
Updated On :8 ஜூன் 2021, 5:53 am

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிலுமுள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை பணிகள் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியான நிலையில் தெப்பக்காடு மற்றும் டாப்சிலிப் யானைகள் முகாம்களிலுமுள்ள வளர்ப்பு யானைகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

Story image

அதைத்தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் உள்ள 27 யானைகள் மற்றும் வாழைத்தோட்டம் பகுதியில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள ரிவால்டோ யானை மொத்தம் 28 யானைகளுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் தொடங்கின மற்றும் ஆசன வாய் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள இசாத்நகர் அரசு கால்நடை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க ப்படுகிறது. மேலும் இந்த யானைகளுடன் அவற்றின் பாகன்கள் 52 பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.