தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தில்லி தீ விபத்து: 5 கடைகள் எரிந்து சேதம்

தில்லியில் உள்ள துணிக்கடையில் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்து 4 கடைகளுக்கு பரவியதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2021, 10:22 am

DIN

தில்லியில் உள்ள துணிக்கடையில் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்து 4 கடைகளுக்கு பரவியதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை குறைந்த காரணத்தால் கடந்த வாரம் முதல் தில்லியில் உள்ள அனைத்து கடைகளும் சில விதிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது.

இந்நிலையில், தில்லி சென்ட்ரல் மார்க்கெட்டின் லாஜ்பட் நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அடுத்தடுத்து உள்ள கடைகளுக்கு வேகமாக பரவத் தொடங்கியது.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத்துறை இயக்குநர் அதுல் கார்க் கூறியது,

தீ விபத்து குறித்து காலை 10.20 மணியளவில் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு 30 வாகனங்களில் 100 வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து நடந்த பகுதிக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் தீ பரவுவதற்கு முன்பு அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும், இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.