பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரபல தேர்தல் கணிப்பு வல்லுநர் பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் முக்கிய தேர்தல்களின் அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டுள்ளார். தற்போது நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி மற்றும் தமிழகத்தில் திமுகவுடன் ‘ஐ-பேக்’ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.