அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

நேபாளத்திற்கு மேலும் ஒரு லட்சம் தடுப்பூசிகள் வழங்கியது இந்தியா

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ஒரு லட்சம் தடுப்பூசிகளை சனிக்கிழமை வழங்கியுள்ளது.

News image

கரோனா தடுப்பூசி

Updated On :27 மார்ச் 2021, 10:31 am

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ஒரு லட்சம் தடுப்பூசிகளை சனிக்கிழமை வழங்கியுள்ளது.

அண்டை நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

இதனையடுத்து நேபாளத்திற்கு 3.50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று ஒரு லட்சம் தடுப்பூசிகள் இந்தியா அனுப்பியது.

இதுகுறித்து நேபாள அதிகாரி ஒருவர் கூறுகையில்,

தடுப்பூசி ஏற்றிவரும் ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் காத்மாண்டாவில் தரையிறங்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக தரையிறக்க முடியவில்லை. 

இருப்பினும், விமானமானது நேபாள எல்லைக்குள் வந்துவிட்டதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.