தில்லியில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
தில்லியில் கரோனா வைரஸ் தொற்று தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தைக் கடந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.
திங்கள்கிழமை காலையுடன் முழு ஊரடங்கு முடிவிற்கு வரும் நிலையில், 3வது முறையாக மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.