கர்நாடகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

கர்நாடகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு
கர்நாடகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு
Published on
Updated on
1 min read

கர்நாடகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. 

எனினும் கரோனா தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. தற்போது மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.

மேலும், ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com