நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தடுப்பூசி 2-ம் டோஸ் போடுபவர்களுக்கே முன்னுரிமை: மத்திய அரசு

கரோனா தடுப்பூசியில் இரண்டாம் டோஸ் போடுபவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மாநில அரசுகளிடம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

News image

கரோனா தடுப்பூசி

Updated On :11 மே 2021, 9:56 am

ANI

கரோனா தடுப்பூசியில் இரண்டாம் டோஸ் போடுபவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மாநில அரசுகளிடம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்ப்பாடு எழுந்துள்ளது. முதல் டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு உரிய நேரத்தில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாநில அரசுகளுக்கு தெரிவித்தது,

அனைத்து மாநிலங்களும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளுக்காக அதிகமானோர் காத்திருப்பதால் அவர்களுக்கு தீர்வு காண அவசியம் ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளில் 70 சதவீதத்தை இரண்டாம் டோஸ் பயனாளிகளுக்காக ஒதுக்க வேண்டும். மீதமுள்ள 30 சதவீதத்தை முதல் டோஸ் செலுத்த வருபவர்களுக்கு போட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.