அவிநாசியில் லாரி-தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்து
அவிநாசியில் லாரி மீது தனியார் நிறுவன வாகன பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சனிக்கிழமை 4 பேர் படுகாயமடைந்தனர்.


அவிநாசி: அவிநாசியில் லாரி மீது தனியார் நிறுவன வாகன பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சனிக்கிழமை 4 பேர் படுகாயமடைந்தனர்.
கோவையில் இருந்து சேலம் நோக்கி தனியார் நிறுவனப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அவிநாசி புறவழிச்சாலை பழங்கரை அருகே சென்றுகொண்டிருந்து போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் வந்த 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.
இது குறித்து அவிநாசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...