இ-பதிவில் கூடுதல் கட்டுப்பாடு

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் முழுப் பொதுமுடக்கம் அமலாகவுள்ள நிலையில், இ-பதிவு முறையிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இ-பதிவில் கூடுதல் கட்டுப்பாடு
இ-பதிவில் கூடுதல் கட்டுப்பாடு
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் முழுப் பொதுமுடக்கம் அமலாகவுள்ள நிலையில், இ-பதிவு முறையிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 10 முதல் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும் கரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. அதனால் வாகனங்களின் போக்குவரத்தை குறைக்கும் விதமாக இ-பதிவு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் 
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

மேலும், மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு 
தேவையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com