மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

‘அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி தருக’: அதிமுக

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி தந்து பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என அதிமுக பிரதிநிதி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

News image
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
Updated On :22 மே 2021, 6:46 am

DIN

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி தந்து பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என அதிமுக பிரதிநிதி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ளது. கடந்த 14 நாள்களாக பொதுமுடக்கம் அமலில் இருந்தபோதிலும், நாள்தோறும் 36,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றார். 

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது தளத்தில் 19 கொண்ட மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனையின் போது, பொதுமுடக்கத்தை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதையடுத்து நடைபெற்று வரும் பேரவை கட்சிகளைச் சோ்ந்த 13 பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடனான ஆலோசனையில் பேசிய அதிமுகவின் விஜயபாஸ்கர், பால், காய்கறி, மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கவேண்டும். நடமாடும் வண்டிகள் மூலம் மக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறி விற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.