சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சட்டப்பேரவையில் மூத்த தலைவர்களின் மறைவுக்கு இன்று இரங்கல் தீர்மானம்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் இரங்கல் தீர்மானம் குறித்து...

News image

தமிழ்நாடு சட்டப்பேரவை - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 7:43 am IST

தமிழக சட்டப்பேரவையில் மூத்த தலைவர்களின் மறைவுக்கு இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

தமிழகத்தின் 17 ஆவது சட்டப்பேரவையில் வியாழக்கிழமையில் ஆளுநர் உரை நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக ஜூன் 19, 22, 23 ஆகிய மூன்று நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் என பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த 3 நாள்களிலும் வினா - விடை நேரம் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இன்றைய கூட்டத்தொடரில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மூத்த தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் தெரிவிக்கப்படவுள்ளன.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர். நல்லகண்ணு, சட்டப்ப்பேரவை முன்னாள் செயலாளர் சி.கு. ராமசாமி, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆர்.பி. சௌத்ரி, கே. ராஜன், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிடோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளன.

தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் தொடங்கப்படும்.

அதுமட்டுமின்றி, மேக்கேதாட்டு அணை விவகாரத்தை எதிர்த்து இன்று (ஜூன் 19) தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்தத் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிகிறார்.

இதனைத் தொடர்ந்து, ஜூன் 22 ஆம் தேதியில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், ஜூன் 23-ல் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலுரையும் வழங்கப்படும்.

மேலும், அமைச்சர்களில் பெரும்பாலானோர் புதியவர்கள் என்பதால், இந்த 3 நாள் கூட்டத்தொடரிலும் வினா - விடை விவாதம் இருக்காது என்றும் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.

Summary

Tamilnadu Legislative Assembly session will be held for three days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.