‘5 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே கடை திறந்திடுக’: பாமக

5 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே கடைகளை திறக்க அனுமதித்து முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என பாமக பிரதிநிதி ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
‘5 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே கடை திறந்திடுக’: பாமக
Published on
Updated on
1 min read

5 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே கடைகளை திறக்க அனுமதித்து முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என பாமக பிரதிநிதி ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ளது. கடந்த 14 நாள்களாக பொதுமுடக்கம் அமலில் இருந்தபோதிலும், நாள்தோறும் 36,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றார். 

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது தளத்தில் 19 கொண்ட மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனையின் போது, பொதுமுடக்கத்தை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதையடுத்து நடைபெற்று வரும் பேரவை கட்சிகளைச் சோ்ந்த 13 பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடனான ஆலோசனையில் பேசிய பாமகவின் ஜி.கே.மணி,

5 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே கடைகளை திறக்க அனுமதித்து முடக்கத்தை நீட்டிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் எடுக்கப்படும் சி.டி.ஸ்கேனுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com